Sunday, October 6, 2024
Home » பைக் மீது லாரி மோதியதில் பள்ளி மாணவி பரிதாப பலி

பைக் மீது லாரி மோதியதில் பள்ளி மாணவி பரிதாப பலி

by Ranjith

பூந்தமல்லி: பூந்தமல்லி அருகே பைக் மீது லாரி மோதிய விபத்தில் பள்ளி மாணவி பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்தவர் ஜெயபால் மகள் யாகவாணி (14). திருமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், ஜெயபால் தனது குடும்பத்துடன் திருவள்ளூரில் புதியதாக கட்டி வரும் வீட்டின் கட்டுமான பணிகளை நேற்று முன்தினம் சென்று பார்த்துவிட்டு வீடு திரும்பினர்.

அப்போது, முன்னால் ஜெயபால் மனைவியுடன் ஒரு பைக்கிலும், யாகவாணி அவரது தாத்தா ஆனந்தன் என்பவருடன் பின்னால் மற்றொரு பைக்கிலும் சென்றுக்கொண்டிருந்தனர். அப்போது, பூந்தமல்லி நெடுஞ்சாலை வானகரம் அருகே சென்றபோது, சர்வீஸ் சாலையில் இருந்து திடீரென திரும்பிய லாரி ஒன்று, யாகவாணி தாத்தாவுடன் சென்ற பைக் மீது மோதியது. இந்த விபத்தில் ஆனந்தன் காயங்களின்றி அதிர்ஷ்டவசமாக உயர் தப்பினார்.

இதில், பலத்த காயமடைந்த யாகவாணியை மீட்டு, சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, தீவிர சிகிச்சை பெற்றுவந்த யாகவாணி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்று ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், யாகவாணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து, வழக்குப்பதிவு செய்த போலீசார், விபத்துக்கு காரணமான லாரி டிரைவரை தேடி வருகின்றனர். இதனால், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

You may also like

Leave a Comment

three + 15 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi