Sunday, October 6, 2024
Home » கதவையே கழட்டி வைத்தாலும் பாஜவை சீண்ட ஆளில்லை: வெச்சு செய்த வீரமணி

கதவையே கழட்டி வைத்தாலும் பாஜவை சீண்ட ஆளில்லை: வெச்சு செய்த வீரமணி

by Ranjith

தஞ்சாவூரில் தி.க. தலைவர் கி.வீரமணி நேற்று அளித்த பேட்டி: தேர்தல் ஆணையர் தனது பதவியை ராஜினாமா செய்தற்கான காரணம் போக போக தெரியும். தேர்தல் பத்திரத்தில் எப்படி மோடி அரசு செய்ததோ, அதேபோல் தேர்தல் ஆணையர் விஷயத்திலும் செய்து இருக்கிறார்கள். இது ஒரு மர்ம கதையாக இருக்கிறது. சிலிண்டர் விலை 100 ரூபாய் குறைத்திருப்பதை தமிழக பெண்கள் ஏமாற மாட்டார்கள்.

திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு என்பது ஏற்கனவே எழுதப்பட்ட ஒரு முடிவு. தேர்தல் கூட்டணிக்கு பாஜ கதவு திறந்து இருக்கிறது என்றார்கள். கதவு திறந்தாலும், ஜன்னல் திறந்தாலும் கதவையே கழட்டி வைத்தாலும் கட்டிடத்தையே திறந்து வைத்தாலும் அவர்களை சீண்டுவதற்கு ஆட்கள் கிடையாது. மோடி அடிக்கடி தமிழகம் வருகிறார்.

தமிழகத்தை பொறுத்தவரை மட்டுமல்ல இந்தியாவை பொறுத்தவரை பாஜ தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கிறது. கூட்டணியே இல்லாதபோது 370 இடங்களில் வெற்றி, 377 இடங்களில் வெற்றி என கூறியிருக்கிறார்கள். இவ்வளவு சீட்டு வெற்றி பெறும் என்ற நிலையில் மற்ற கட்சிகளை அழைக்க வேண்டிய அவசியம் என்ன? கதவு திறந்து இருக்க வேண்டிய அவசியம் என்ன?. மோடி மணிப்பூருக்கு செல்ல தயாராக இல்லை, ஆனால் யானை மீது சவாரி செய்ய தயாராக இருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.

You may also like

Leave a Comment

3 × 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi