போடி, மார்ச் 7: தேனி மாவட்டம், போடி நகர் காவல் நிலைய எஸ்ஐ அசோக் மற்றும் போலீசார் கீழத்தெரு அரசமரம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார். அந்த வழியாக வேகமாக வந்த ஒரு டூவீலரை நிறுத்தி விசாரணை நடத்தினர். இதில், டூவீலரை ஓட்டி வந்தவர் போடி கீழத்தெருவை சேர்ந்த தங்கப்பாண்டி (52) என்பதும், ஒரு பையில் மறைத்து வைத்து மதுபாட்டில்களை கடத்த முயன்றதும் தெரியவந்தது. இதனையடுத்து அவரிடமிருந்த 26 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக போலீசார், கருத்திவீரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.