டெல்லி : சட்டவிரோத மணல் விற்பனை விவகாரத்தில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. அமலாக்கத்துறை சம்மனுக்கு ஆட்சியர்கள் நிச்சயம் ஆஜராக வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் திருச்சி,கரூர்,அரியலூர், தஞ்சை, வேலூர் ஆட்சியர்களுக்கு சம்மன் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.