எருசலேம்: இஸ்ரேல் எல்லையில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. ஹஸ்புல்லா அமைப்பினரின் தாக்குதலில் இந்தியர் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து இஸ்ரேலுக்கான இந்திய தூதரகம் அறிவுரை வழங்கியுள்ளது. இந்தியர்களின் பாதுகாப்பு தொடர்பாக இஸ்ரேல் தூதரக அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.