‘‘பிளாக் மெயில் செய்து புல்லட்சாமியை கைக்குள் வைத்திருக்கிறாரமே நல்ல அதிகாரி’’ என கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா.
‘‘புதுச்சேரி மாவட்ட ஆட்சியராக இருந்த ரொம்ப நல்லவர், கோவாவுக்கு மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக காரைக்காலில் பணியாற்றி வந்த சோழ மன்னன் பெயரை கொண்டவர் நியமிக்கப்பட்டவர். அந்த ரொம்ப நல்ல அதிகாரி மாற்றப்பட்டாலும், வருவாய், உள்ளாட்சி உள்ளிட்ட மற்ற துறை பொறுப்புகளில் இருந்து இன்னமும் விடுவிக்கப்படவில்லையாம்.. இதனால மற்ற அதிகாரிகளிடம் கெத்து காட்டி வருகிறாராம்.. ஒன்றிய அரசு உத்தரவிட்டால் உடனே போய்விட வேண்டுமா… புல்லட் இருக்கும் வரை என்னை யாரும் ஒண்ணும் செய்ய முடியாது எனக்கூறி வருகிறாராம்… அதோடு புதிதாக பொறுப்பேற்ற ஆட்சியரிடம், மாவட்ட ஆட்சியர் என்ற முறையில் எந்த நடவடிக்கை எடுத்தாலும், புல்லட்சாமியிடம் கேட்டுவிட்டுதான் முடிவு எடுங்கள். தான் பொறுப்பு வகித்த காலத்தில் முடக்கி வைத்திருக்கும் கோப்புகளுக்கு அனுமதி தரக்கூடாதுன்னு மறைமுகமாக புதிய ஆட்சியருக்கு நெருக்கடி காட்ட தொடங்கிவிட்டாராம் அந்த ரொம்ப நல்ல அதிகாரி.. புல்லட்சாமி கொடுக்கும் தைரியத்தில் தலை கால் புரியாமல் அதிகாரத்தை வைத்து ஆட்டம் போடுகிறாராம்.. இதனால் புல்லட்சாமி தயவில் ஆடுகிறாரா, இல்லை புல்லட்சாமியை பிளாக் மெயில் மூலம் பிடியில் வைத்துள்ளாரா என புரியாமல் புதுச்சேரி தலைமை செயலக வட்டாரங்கள் தவிச்சிக்கிட்டு இருக்காங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘கூட்டத்தை சேர்க்க படாத பாடுபட்டாங்களாமே இலைக்கட்சியினர் எங்கவாம்..’’ என அடுத்த கேள்வியை கேட்டார் பீட்டர் மாமா.
‘‘சில தினங்களுக்கு முன்னால நெற்களஞ்சியம் மாவட்டத்தில் சேலத்துக்காரர் கலந்து ெகாண்ட ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அதிகளவு கூட்டத்தை சேர்க்க வேண்டும்னு இலைக்கட்சியின் நிர்வாகிகளுக்கு ரகசிய உத்தரவு போடப்பட்டு இருந்ததாம்.. ஆனால், கூட்டத்தை அதிகளவு சேர்ப்பதற்காக இலைக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் படாத பாடுபட்டுட்டாங்களாம்.. முக்கியமா, ‘விட்டமின் ப’ கொடுத்தும் கூட்டம் வரவில்லையாம். வேறுவழியின்றி அதிகளவு விட்டமின் ‘ப’ கொடுத்து கூட்டத்தை கூட்டினார்களாம்.. அப்படி இருந்தும் சொல்லும் அளவுக்கு கூட்டம் வரவில்லையாம்.. இதனால விட்டமின் ‘ப’ கொடுத்தும்கூட சேலத்துக்காரர் ஆசைப்பட்டமாதிரி கூட்டம் வரவில்லையேன்னு இலைக்கட்சியின் நிர்வாகிகள் ரொம்பவே புலம்பியபடி சென்றார்களாம்’’ என்றார் விக்கியானந்தா.
‘‘கனெக்ஷன் கேட்டுப்போனா கலெக்ஷன் பார்க்கும் பவர் ஆபிஸ் பெண் அதிகாரி தன்னோட பவர காட்டுறாராமே…’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘மிஸ்டர் பத்தூர் மாவட்டத்துல பேட்டை என்று முடியும் ஊர்ல பவர் ஆபிஸ் இருக்குது.. இந்த ஆபிஸ்ல பெண் அதிகாரி ஒருத்தர் பணிபுரிஞ்சுட்டு வர்றாங்களாம்.. ஆபிஸ்ல புதிய கனெக்ஷன், ப்ரீ கனெக்ஷன் கேட்டு பயனாளர்கள் விண்ணப்பிச்சா ஒவ்வொரு விண்ணப்பத்துக்கும், 5 கே முதல் 20 கே வரைக்கும் சம்திங் செலவாகுதாம்.. அது இல்லாம எந்த வேலையும் நடக்குறதேயில்லையாம்.. இந்த சம்திங்க அந்த ஆபிசர் வேற ேநரடியாக வாங்குறதில்லையாம்.. அதுக்கும் தனி ஆள் இருக்காங்களாம்.. அவங்க மூலமாத்தான் கைக்கு போகிறதாம்.. இதனால விண்ணப்பத்தை கையில வெச்சிக்கிட்டு நாள் தான் ஓடுதாம், வேலை முடியாம மக்கள் ரொம்பவே அவதிப்படுறாங்களாம்.. இதனால கூலியும் போயி, மனவேதனை தான் மிச்சம்னு ஜனங்க புலம்பும் சத்தம் அதிகமாக கேட்கத் தொடங்கியிருக்குதாம் அந்த பவர் ஆபிஸ்ல. எனவே, சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிங்க அந்த ஆபிசுல ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கணும்னு கோரிக்கை குரல் ஒலிக்கத்தொடங்கியிருக்கிறதாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘தொகுதிக்கு 50 பேராவது விருப்ப மனு கொடுக்கணும்னு மாவட்டச் செயலாளர்களுக்கு பறந்த உத்தரவு தெரியுமா’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘மத்தளத்துக்கு ரெண்டு பக்கமும் தான் இடி. ஆனா.. இலைக்கட்சி தலைவரான சேலத்துக்காரருக்கோ நாலா பக்கமும் இடியாம்.. நெஞ்ச நிமிர்த்திக்கிட்டு டெல்லி கூட்டணியில போஸ் கொடுத்தாரு.. ஆனா, இப்போ கூட்டணிய உடைச்சிக்கிட்டு, அங்கிருந்து வெளியே வந்துட்டாரு.. ஆனாலும் கூட்டணியில சேர்ந்தே ஆகணுமுன்னு டெல்லி இன்னும் மிரட்டிக்கிட்டே இருக்காம்.. இதற்காக ஒருவாரம் டைம்
கொடுத்திருக்காங்களாம்.. இல்லை என்றால் தூக்கிடுவோமுன்னு வேற மிரட்டலாம்.. இதனால பெல் பெயரை கொண்டவரு தலைவருகிட்ட தொடர்ந்து பேசிக்கிட்டே இருக்காராம்.. ஆனாலும் இலைக்கட்சி தலைவரோ, நழுவிக்கிட்டே இருப்பதாக கட்சிக்காரங்க பேசிக்கிறாங்க.. தேனிக்காரரும் இலை எனக்குதான்னு சவுண்ட் விடுறாரு.. ஏதாவது கோர்ட்டுக்கு போயி தடை வாங்கிட்டா என்னாவது என்கிற பீதி வேற.. கூட்டணியில இன்னும் ஆட்கள் யாரும் சேரல.. இப்படியே அடிக்கு மேல் அடி விழுந்தால் தலைவர் என்ன தான் செய்வாரு?. ஆனாலும், கீழே விழுந்தாலும் மீசையில மண் ஒட்டல கதையா, தேர்தலில் போட்டியிட இலைக்கட்சி நிர்வாகிகள் அலைமோதுகிறார்கள் என்ற எண்ணத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது அவரது திட்டமாம்.. இதனால தொகுதிக்கு குறைந்தது 50 பேராவது, விருப்ப மனு கொடுக்கணுமுன்னு உத்தரவு போட்டிருக்காரு.. ஒவ்வொரு மாவட்ட செயலாளரும், கட்சியின் அனைத்து பிரிவு தலைவர்களையும், வசதியானவங்களையும் விருப்ப மனு கொடுக்க சொல்லி இருக்காங்க.. இப்படியாவது தலைவரின் கரத்தை வலுப்படுத்துவோமுன்னு, ஒவ்வொருவரும் ₹20 ஆயிரம் செலுத்தி விருப்ப மனு கட்டியிருக்காங்களாம்… இவ்வாறு பணம் கட்டினவங்க எண்ணிக்கை மட்டும் 1800ஐ தாண்டுதாம்..’’ என்று சொல்லி முடித்தார் விக்கியானந்தா.