சென்னை: மதிமுக பொது செயலாளர் வைகோ பேட்டி: திமுக உடனான தொகுதி பங்கீடு இன்னும் ஓரிரு நாளில் முடியும். தொகுதி பங்கீட்டில் எந்த முரண்பாடும் இல்லை. உடன்பாடு மனதளவில் இருக்கிறது. இந்த தேர்தலில் மதிமுக தனிச்சின்னத்தில் போட்டியிடும். கட்சி ரீதியான பதிவை தக்க வைத்துக் கொள்ளவே இந்த முடிவு. ஆணையம் விதிகளின்படி, தனிச்சின்னத்தில் போட்டியிட வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. அதனால், தனிச்சின்னம் கேட்டு இருக்கிறோம்.