நாமக்கல்: நாமக்கல்லில் பாஜ மாநில துணைத்தலைவர்கள் விபி. துரைசாமி, கேபி. ராமலிங்கம் ஆகியோர் கூட்டாக நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: பாஜவை வலிமைப்படுத்தி வெற்றி பெறும் நோக்கில், பிரதமர் தமிழகத்திற்கு வந்து செல்கிறார். இன்னும் ஓரிரு வாரங்களில், பல்வேறு கட்சிகளின் மூத்த நிர்வாகிகள் மற்றும் தலைவர்கள் பாஜவில் இணைய உள்ளனர். இன்னும் ஓரிரு தினங்களில் பாஜ உடனான கூட்டணி கட்சிகள் குறித்து முடிவு செய்யப்படும். கூட்டணி தலைவர்களுடன் கருத்து ஒற்றுமையாக பாஜ உள்ளது. தமிழகத்தில் பிரதமரின் வருகை, மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் பாதுகாப்புக்காக குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுத்தளத்தை பிரதமர் தொடங்கி வைத்துள்ளார். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.