சென்னை: பல்லாவரம் எம்.எல்.ஏ.வின் மகன், மருமகள் ஜாமின் மனு மீது நாளை மறுநாள் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது. வீட்டு பணிப்பெண்ணை துன்புறுத்தியதாக பல்லாவரம் எம்.எல்.ஏ.வின் மகன் ஆண்டோ மதிவாணன், மனைவி மெர்லினா மீது வழக்கு தொடரப்பட்டது. வன்கொடுமை தடுப்புச்சட்டத்தில் வழக்கு பதிவுசெய்த போலீசார், இருவரையும் கைது செய்தனர்.