பாமக தலைவர் அன்புமணி வடலூரில் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘ஊடகத்துறை புனிதமானதுறை அது தற்போது, அவசரப்பட்டு பொய்யான செய்திகள் வதந்திகளை பரப்பி வருகின்றனர். தினம், தினம் எங்களைப்பற்றி பொய்யான வதந்திகளை பரப்புகின்றனர். இது மிகவும் வருந்தத்தக்கது. எங்களை மிகவும் கொச்சைப்படுத்தி செய்திகளை திரித்து வெளியிட்டு வருகின்றனர். இன்னும் ஓரிரு வாரங்களில் நாங்களே கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம். அதுவரை பொதுமக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம். கூட்டணி என்பது பல கட்சிகள் சேர்ந்தது, அதனால் பொறுமையாக இருங்கள் நாங்களே அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம். மீண்டும் சொல்கிறேன் வதந்திகளை நம்ப வேண்டாம். பாமக யாருடனும் கூட்டணி குறித்து பேசவில்லை’ என்றார்.