பண்ட்வால்: தென்கனரா மாவட்டம், பண்ட்வால் தாலுகா விட்லாவில் இருந்து அலிக்கே செல்லும் சாலையில் உள்ள படிபாகல் வாசலில், இரண்டு ஆட்டோ ரிக்ஷாக்கள் நேருக்கு நேர் மோதியதில், ஒருவர் உயிரிழந்தார். மேலும் 8 பேர் காயமடைந்தனர். தென்கனரா மாவட்டம், பண்ட்வால் தாலுகாவில் உள்ள மடியாலா பகுதியைச் சேர்ந்தவர் அம்மு மூலியா (69). இவர் ஹமீத் (65), படிபாகலைச் சேர்ந்த ரவிக்குமார் (45), வீணா (45), ரமா (56), ஜோரா (42), சாய் கிருத்தி (26), ஷர்மிளா (42), மற்றும் ஜமீர் (13) ஆகியோருடன் ஆட்டோ ரிக்ஷாவில் சென்றுக்கொண்டிருந்தால் தாலுகாவின் விட்லா அருகே உள்ள அலிக்கே செல்லும் சாலையில், எதிரே வந்த ஆட்டோவின் மீது இவர்கள் சென்ற ஆட்டோ மோதியது. இதில் வாகனம் சாலையோர சாக்கடையில் கவிழ்ந்ததது இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அம்மு மூலியா சம்பவ இடத்திலேயே உயிரிழ்ந்தார். மேலும் உடன் இருந்த 8 பேரும் பலத்த காயமடைந்தனர். விபத்து குறித்து பண்ட்வால் போக்குவரத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.