சென்னை: மக்களவை தேர்தல் கூட்டணி தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சியுடன் அதிமுக, பாஜக பேச்சுவார்த்தை நடைபெறுவதாக கூறப்படுகிறது. நேற்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியை பாமக எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் சந்தித்துப் பேசினர். மரியாதை நிமித்தமான சந்திப்பு என எம்.எல்.ஏ.க்கள் விளக்கம் அளித்தாலும் இரு கட்சிகள் இடையே பேச்சு நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று மட்டுமின்றி அண்மைக்காலத்தில் 4 முறை பழனிசாமியுடன் பாமக எம்எல்ஏ ஒருவர் சந்தித்து பேசியிருப்பதாகவும் , ஏற்கனவே பாமக நிறுவனர் ராமதாஸை அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சந்தித்து பேசியிருந்தார். 8 மக்களவை தொகுதிகள் மற்றும் மாநிலங்களவை எம்.பி. பதவியை பாமக கேட்பதாக கூறப்படுகிறது. சிதம்பரம், கடலூர், தருமபுரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திண்டுக்கல், விருதுநகர் தொகுதிகளை பாமக கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது.