சென்னை : பெரம்பூர் பகுதியில் மெட்ரோ நிர்வாக வாகனத்தை கல்லால் அடித்து வாகனத்தின் கண்ணாடிகளை உடைத்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் இரவு மெட்ரோ ரயில் ஊழியர்களை அழைத்து சென்று மெட்ரோ நிர்வாக வாகன கண்ணாடிகளை உடைத்துள்ளனர். அப்பு (25), சீனிவாசன் (24), பிரவீன் (22), புகழேந்தி (25) சந்தோஷ் (24), பார்த்திபன் (26) ஆகியோரை போலீஸ் கைது செய்துள்ளனர்.