குமாரபுரம்: குமரி மாவட்டம், கருங்கல் மேலகண்டவிளை பகுதியை சேர்ந்தவர் மாவட்ட திமுக வழக்கறிஞரணி அமைப்பாளர் ஜோசப் ராஜ் (62). இவர் தனது முகநூல் பக்கத்தை பார்த்துக் கொண்டிருந்த்போது விஜில் ஜோன்ஸ் என்ற பெயரில் உள்ள கணக்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மனோ தங்கராஜ் ஆகியோர் குறித்து அவதூறாக குறிப்பிட்டிருந்ததை குறித்து தக்கலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பெங்களூருவில் பணியாற்றும் திங்கள்சந்தை பகுதியை சேர்ந்த ஐடி ஊழியர் விஜில் ஜோன்ஸ் (40) என்பவரை பெங்களூருவில் தனிப்படை போலீசார் கைது செய்து செய்தனர்.