சேலம்: சேலம் அருகே பனமரத்துப்பட்டியில் சாலையோரம் நின்றிருந்த லாரி மீது கார் மோதியதில் 2 மருத்துவ மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பொய்மான் கரடு என்ற இடத்தில் சாலையோரம் நின்ற லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் புதுச்சேரி மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரியில் படித்த கௌதம் (20) காம்கோ(21) ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.