மதுரை : காளை முட்டி உயிரிழந்த இளைஞரின் குடும்பத்துக்கு ஏன் இழப்பீடு வழங்கக் கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. ஜல்லிக்கட்டுக்கு காளையுடன் வந்த இளைஞர் உயிரிழந்துள்ளார்; ஏதாவது ஒரு வகையில் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோர்ட் ஆணையிட்டுள்ளது. மேலும் மனு தொடர்பாக தேனி மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் காரியப்பட்டியைச் சேர்ந்த சங்கரேஸ்வரி என்பவர் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.