திருத்துறைப்பூண்டி: இயந்திரத்தில் தலைமுடி சிக்கி தலையில் பலத்த காயமடைந்த பெண்ணுக்கு இழப்பீடு தர ஆணையிடப்பட்டுள்ளது. கருடன் அப்பள நிறுவனத்தில் பணிபுரியும்போது கார்த்திகா (34) என்பவரின் தலைமுடி இயந்திரத்தில் சிக்கியது. பணியின்போது இயந்திரத்தில் தலைமுடி சிக்கியதில் தலையில் பலத்த காயமடைந்தார் கார்த்திகா. கார்த்திகாவுக்கு கருடன் அப்பள நிறுவனம் ரூ.32.10 லட்சம் இழப்பீடு தர திருவாரூர் மாவட்ட நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.