சென்னை: சென்னை அடுத்த பட்டரவாக்கம் ரயில் நிலையத்தில் மாணவர்கள் மோதல் தொடர்பாக பெரம்பூர் ரயில்வே போலீஸ் வழக்குப்பதிவு செய்தனர். நேற்று இரு கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் கற்கள் மற்றும் பாட்டில்களால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். பெரம்பூர் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து, மோதலில் ஈடுபட்ட மாணவர்களை தேடி வருகின்றனர்.