சென்னை: ஜாக்டோ ஜியோ அமைப்புடன் தமிழ்நாடு அரசு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்துதல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை ஜாக்டோ ஜியோ அமைப்பு வலியுறுத்தியுள்ளது. பிப்.26-ல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக ஜாக்டோ ஜியோ அமைப்பு ஏற்கனவே அறிவித்துள்ளது. போராட்டம் அறிவித்துள்ள நிலையில் ஜாக்டோ ஜியோ அமைப்புடன் தமிழ்நாடு அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.