திருப்பூர்: எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவினர் அவிநாசியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். கண்டன ஆர்ப்பாட்டத்தில் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டுள்ளனர். அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி; சிறு, குறு, நடுத்தர தொழில்கள் நிறைந்த மாவட்டம் திருப்பூர்; மின்கட்டண உயர்வால் சிறு, குறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளது. எதிரியையும் வாழ வைத்தவர் எம்.ஜி.ஆர்.
நாட்டிற்காக உழைத்த தலைவர்களை அவதூறாக பேசுவதை கைவிட வேண்டும். அதிமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. தமிழகத்தில் 30 ஆண்டுகள் ஆட்சி செய்த கட்சி அதிமுக. அதிமுக ஆட்சி செய்த 30 ஆண்டுகளில்தான் தமிழகம் ஏற்றம் கண்டது என்று கூறினார்.