மும்பை : ஜெய்ஸ்ரீ ராம் சொல்வதில் என்ன தவறு? என்று கிரிக்கெட் வீரர் முகமது ஷமி கேள்வி எழுப்பியுள்ளார். மேலும்,” அனைத்து மதங்களிலும் மற்ற மதங்களைச் சேர்ந்தவர்களை விரும்பாத 5 – 10 பேர் இருக்கத்தான் செய்வார்கள். ராமர் கோயில் கட்டப்படுகிறது என்றால் ஜெய் ஸ்ரீராம் என்று சொல்வதில் என்ன பிரச்னை இருக்கிறது. 1000 முறை கூட சொல்லலாம். அதேபோல், அல்லாகூ அக்பர் என்று எனக்கு சொல்ல தோன்றினால் நானும் அதேபோல் சொல்வேன்.இப்படி செய்வதால் என்ன வேறுபாடு வந்துவிடப்போகிறது,”எனத் தெரிவித்துள்ளார்.