திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நேற்று அளித்த பேட்டி: மாநில உரிமை, நிதி கேட்டு மாநில முதலமைச்சர்கள் நேரடியாக டெல்லிக்கு சென்று போராட வேண்டிய நிலை எந்த காலத்திலும் ஏற்பட்டது இல்லை. நாடாளுமன்ற தேர்தல் ஜனநாயக பூர்வமாக நடைபெறுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
400 இடங்களில் வெற்றி பெறுவோம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. தேர்தல் அதிகாரிகளை வைத்து முடிவுகளை மாற்றி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுமா என்ற சந்தேகம் நாடு முழுவதும் எழுந்துள்ளது. திமுக தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் தங்கள் கூட்டணிக்கு வரலாம் என அழைப்பு விடுக்கும் அதிமுக மற்றும் பாஜ கட்சிகளின் நப்பாசை வெற்றி பெறாது. இவ்வாறு அவர் கூறினார்.