சென்னை: போக்குவரத்து தொழிலாளர்கள் முத்தரப்பு பேச்சுவார்த்தை சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் தொடங்கியது. சிஐடியூ, அண்ணா தொழிற்சங்கம், ஏஐடியூசி உள்பட 27 தொழிற்சங்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தையில் பங்கேற்றுள்ளன. தொழிலாளர் நல இணை ஆணையர் ரமேஷ் தலைமையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. அரசு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்களும் பேச்சுவார்த்தையில் பங்கேற்றுள்ளனர்.