சென்னை: புழலில் தனியார் நிறுவன ஊழியர் கிரெடிட் கார்டில் இருந்து நூதன முறையில் ரூ.59,647 ஆன்லைன் மோசடி செய்யப்பட்டுள்ளது. ஞானவேல் என்பவரது கிரெடிட் கார்டில் சேவை கட்டணத்துக்கு சலுகை தருவதாக கூறி நூதன முறையில் ரூ.59,647 மோசடி செய்யப்பட்டுள்ளது. ஞானவேல் அளித்த புகாரின் பேரில் புழல் போலீசார் வழக்கு பதிந்து ஆன்லைன் மோசடி கும்பல் குறித்து விசாரணை நடைபெறுகிறது.