போபால் : மத்தியப்பிரதேசத்தின் ஹர்தா பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். பட்டாசு ஆலையில் ஒருமணி நேரத்துக்கும் மேலாக பட்டாசுகள் தொடர்ந்து வெடித்துக்கொண்டே இருப்பதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. பட்டாசு ஆலை அருகே உள்ள 60 வீடுகளுக்கு தீ பரவியதால் பதற்றமான சூழல் நிலவுகிறது.