கடலூர்: கடலூரில் பேரறிஞர் அண்ணா 55 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மஞ்சகுப்பம் பகுதியில் அமைந்துள்ள அவரது உருவ சிலைக்கு திராவிட கழக தலைவர் வீரமணி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அருகில் சட்டமன்ற உறுப்பினர் கோ ஐயப்பன் மேயர் சுந்தரி ராஜா முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இலா.புகழேந்தி மாநகர செயலாளர் ராஜா மற்றும் கட்சி தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.