கோவை: கோவையை சேர்ந்த லாவண்யா ஜூவல்லரியின் ரூ.34.11 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. வங்கிக் கடன் மோசடி வழக்கில் சென்னை, கோவையில் உள்ள சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது. கோவை, சென்னையில் உள்ள ரூ.34.11 கோடி மதிப்புள்ள நிலம் மற்றும் குடியிருப்பை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.