டெல்லி: 40,000 சாதாரண ரயில் பெட்டிகள் வந்தே பாரத் ரயில் பெட்டிகளாக தரம் உயர்த்தப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். நாடு முழுவதும் வந்தே பாரத் ரயில்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். ரயில்வே சரக்கு போக்குவரத்தில் நெரிசல்களை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். புதிய சாலை, ரயில், துறைமுகங்களுக்கான வழித்தடங்கள் ஏற்படுத்தப்படும் என நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.