டெல்லி: 2047-ல் வளர்ச்சி பெற்ற புதிய இந்தியா உருவாகும் என ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். பா.ஜ.க. அரசின் இலக்காக சமூகநீதி உள்ளது. அனைத்து மாநிலங்களுக்குமான வளர்ச்சி என சமூக, புவியியல் உள்ளடக்கத்தை கொண்டதாக அரசின் கொள்கைகள் உள்ளது என்று நிர்மலா தெரிவித்தார்.