மொத்த காலியிடங்கள்: 55. ஆண்கள்- 50 (இவற்றில் 5 இடங்கள் போரில் இறந்த ராணுவ வீரர்களின் வாரிசுளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன). பெண்கள்- 5 (இவற்றில் ஓரிடம் போரில் இறந்த ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
சம்பளம்: ரூ.56,100- 1,77,500.
வயது: 01.07.2024 தேதியின்படி 19 முதல் 25 வயதிற்குள்.
தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் குறைந்தது 50% மதிப்பெண்களுடன் இளநிலை பட்டம் பெற்று என்சிசியில் குறைந்த பட்சம் ‘சி’ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.போரில் இறந்த ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கான கல்வித்தகுதி: இளநிலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
உடற்தகுதி: ஆண்கள்- உயரம்: 157 செ.மீ., உயரத்திற்கேற்ற எடை இருக்க வேண்டும். பெண்கள்- உயரம்: 152 செ.மீ., எடை- 42 கிலோ.உடற்திறன் தேர்வு: 2.4 கி.மீ., தூரத்தை 15 நிமிடங்களுக்குள் ஓடிக் கடக்க வேண்டும். 25 சிட்அப்கள், 13 புஷ்அப்கள், 6 சின்அப்கள் மற்றும் 3 முதல் 4 மீட்டர் தூரம் கயிறு ஏறும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
உடற்தகுதி, உடற்திறன் தேர்வு, மருத்துவ பரிசோதனை மற்றும் எஸ்எஸ்பி நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.அலகாபாத், போபால், பெங்களூரு, கபூர்தாலா ஆகிய மையங்களில் எஸ்எஸ்பி தேர்வு நடைபெறும். தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு சென்னையிலுள்ள ஆபீசர்ஸ் டிரெய்னிங் அகடமியில் 49 வாரங்கள் பயிற்சி வழங்கப்படும். அக்டோபரில் பயிற்சி தொடங்கும். 6 மாதங்கள் அதிகாரி பணிக்கான பயிற்சிக்குப் பின் லெப்டினென்ட் பணி வழங்கப்படும்.
www.joinindianarmy.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 06.02.2024.