திருச்சி: திருச்சி சிறப்பு அகதிகள் முகாமில் ராபர்ட் பயஸ் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட ராபர்ட் பயஸ் உண்ணாவிரதம் நடத்தி வருகிறார். தாம் உட்பட சாந்தன், முருகன், ஜெயக்குமாரை இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை கோரி பயஸ் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். விடுதலை செய்யப்பட்டு ஒன்றரை ஆண்டு ஆனபோதும் சிறை கொட்டடியில் இருந்து விடுவிக்கப்படவில்லை. முகாமில் எனது உரிமைகளுக்கோ, உணர்வுகளுக்கோ எந்த மதிப்பும் இல்லை என ஆட்சியருக்கு பயஸ் மனு அனுப்பியுள்ளார்.