Saturday, September 21, 2024
Home » தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: 32வது கட்ட விசாரணை நிறைவு

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: 32வது கட்ட விசாரணை நிறைவு

by kannappan

தூத்துக்குடி: தூத்துக்குடியில் கடந்த 2018ம் ஆண்டு நடந்த துப்பாக்கி சூடு, தடியடி, கலவரத்தில் 13 பேர் பலியான சம்பவம் தொடர்பாக, அரசு அமைத்துள்ள நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் ஆணைய விசாரணை நடந்து வருகிறது. ஏற்கனவே நடந்த 31 கட்ட விசாரணையில், 979 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆணையத்தின் 32வது கட்ட விசாரணை, தூத்துக்குடி பீச் ரோடு விருந்தினர் மாளிகையில் உள்ள முகாம் அலுவலகத்தில் விசாரணை அதிகாரி அருணா ஜெகதீசன் தலைமையில் கடந்த 16ம் தேதி துவங்கியது. இதில் தாசில்தார்கள், கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள், துப்பாக்கியால் சுட்ட போலீஸ்காரர்கள் உள்ளிட்ட 41 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. தாசில்தார்கள், கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள், துப்பாக்கியால் சுட்ட போலீசார் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. நேற்று வரை நடந்த இந்த விசாரணையில் 40 பேர் ஆஜராகி வாக்குமூலம் பதிவு செய்தனர். ஒருநபர் ஆணையம் விசாரணைக்காக இதுவரை 1393 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. 1016 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. 1342 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டுள்ளன. ஆணையத்தின் அடுத்தகட்ட விசாரணை, வருகிற 13ம் தேதி முதல் 18ம் தேதி வரை நடக்கிறது….

You may also like

Leave a Comment

five × two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi