சென்னை: நடிகர் மன்சூர் அலிகானுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்த உத்தரவுக்கு தடைவிதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. தனி நீதிபதி உத்தரவை எதிர்த்த மேல்முறையீட்டு வழக்கில் இரு நீதிபதிகள் அமர்வு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. அபராதம் செலுத்துவதாக தனிநீதிபதி முன் ஒப்புக்கொண்டு கால அவகாசம் பெற்றுள்ள நிலையில் தடைவிதிக்க முடியாது என உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. அபராத உத்தரவை திரும்பப்பெறக் கோரி தனிநீதிபதியை அணுக நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.