கும்பகோணம்: கடலில் மூழ்கி 3 மாணவர்கள் உயிரிழந்ததை ஒட்டி கும்பகோணம் அரசு கலைக் கல்லூரி வகுப்புகள் அனைத்தும் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. கலைக்கல்லூரியில் மாணவர்கள் 14 பேர் நேற்று கல்லூரி விடுமுறை என்பதால் காரைக்காலுக்கு சுற்றுலா சென்றனர். நேற்று மதியம் காரைக்கால் கடலில் குளிக்கும்போது அபிலேஷ், ஜெகதீஸ்வரன், ஹேமா மாலினி நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.