மதுரை : கணவருக்கு 500க்கும் மேற்பட்ட பெண்களுடன் தொடர்பிருப்பதாக மனைவி தொடர்ந்த வழக்கில் தஞ்சை காவல் கண்காணிப்பாளர், சிபிசிஐடி தரப்பில் பதிலளிக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. வங்கியில் வேலை பார்க்கும் கணவருக்கு 500க்கும் மேற்பட்ட பெண்களுடன் தொடர்பு என மனைவி தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. போனில் பல பெண்களின் ஆபாச புகைப்படங்களை வைத்திருந்ததை கேட்டதற்கு கணவர் தாக்கியதாகவும் புகார் கூறுகிறார் மனைவி. தஞ்சை மகளிர் போலீசில் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்காததால் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றக்கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.