திருவனந்தபுரம் : கேரளாவில் பாஜக மாநில தலைவர் ரஞ்சித் சீனிவாசன் கொலை வழக்கில் 15 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2021ல் வீடு புகுந்து ரஞ்சித் சீனிவாசன் கழுத்தை அறுத்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை சேர்ந்த 15 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.