திருவாரூர்: திருவாரூர் அருகே வண்டாம்பாளையத்தில் விவேகானந்தம் வித்யாஷ்ரம் சிபிஎஸ்இ மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் நேற்று முன்தினம் நடைபெற்ற 75வது குடியரசு தின விழாவில் முதல்வர் மகாலட்சுமி முன்னிலையில் தாளாளர் ஜனகமாலா தேசியக் கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். மேலும் இந்த நிகழ்ச்சியில் தேசபற்றினை பறைசாற்றும் வகையில் தேசதலைவர்களை போல் வேடம் அணிந்து நடைபெற்ற போட்டிகளில் விடுதலை உணர்வை தூண்டும் வகையிலும், தேசத்தலைவர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையிலும் மாணவர்கள் பேசியதுடன் நாட்டின் மத நல்லிணக்கத்தையும், ஒருமைப்பாட்டையும் பறைசாற்றும் வகையில் மாணவர்கள் மூலம் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. இறுதியாக போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை தாளாளர் ஜனகமாலா வழங்கினார்.