சென்னை: டிஎன்பிஎஸ்சி, ஆர்ஆர்பி உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. சர் தியாகராயா கல்லூரியில் 500 இடங்கள் மற்றும் மாநிலக் கல்லூரியில் 300 இடங்களுக்குப் பயிற்சி வகுப்புகளுக்கு இணையவழியாக விண்ணப்பம் பெற்று சேர்க்கை நடைபெற உள்ளது. பயிற்சி வகுப்புகள் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை 6 மாதத்திற்கு வேலைநாட்களில் நடைபெறும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.