வந்தவாசி: டிராக்டருடன் கிணற்றில் விழுந்த தொழிலாளி பலியானார். திருவண்ணமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த கோதண்டபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பத்மநாபன்(36), விவசாய கூலி தொழிலாளி. மழையூர் தாழம்பூண்டி கிராமத்தை சேர்ந்த விஜயபாரத்(45) என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் நேற்று முன்தினம் நீர்மூழ்கி மின் மோட்டார் பழுதானது. இதை கயிறு மூலம் இழுத்தபோது மண்ணில் சிக்கிக் கொண்டிருந்ததால், மீட்க முடியவில்லையாம். இதனால் விஜயபாரத், பத்மநாபனை அழைத்து வந்தார். பத்மநாபன் டிராக்டர் மூலம் மின் மோட்டாரை மீட்கலாம் என கூறி உள்ளார். பின்னர் விஜயபாரத்தின் உறவினர் ஐயப்பனுக்கு சொந்தமான டிராக்டர் மூலம் கயிறு கட்டி மின் மோட்டரை மீட்க பத்மநாபன் முயன்றுள்ளார். அப்போது டிராக்டரை பத்மநாபன் பின்னால் ஓட்டி வந்துள்ளார். இதில் எதிர்பாராத விதமாக திடீரென கிணற்றில் மண் சரிவு ஏற்பட்டு டிராக்டர் கிணற்றின் உள்ளே விழுந்தது. டிராக்டருடன் பத்மநாபன் நீரில் மூழ்கி பலியானார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.