டெல்லி: பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த பிரச்னைகளை பாஜக அரசு தீர்த்து வைத்துள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தேசிய வாக்காளர் தினத்தையொட்டி இளம் வாக்காளர்களுடன் பிரதமர் மோடி உரையாடினார். மக்கள் ஊழல் பற்றி பேசுவதற்கு பதில் நம்பகத்தன்மை பற்றி பேசுகிறார்கள். நாடு முழுவதும் 5,000 இடங்களில் இருந்து லட்சக்கணக்கான இளைஞர்களுடன் மோடி உரையாற்றினார். இளைஞர்கள் தேர்தலில் பங்கேற்பதை ஊக்குவிக்கும் விதமாக பிரதமர் மோடி உரையாற்றினார்.