சென்னை: கோவை மாநகர் மேற்கு மாவட்ட திமுக முன்னாள் நிர்வாகி பையா என்ற ஆர்.கிருஷ்ணன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். பையா என்ற ஆர்.கிருஷ்ணன் மரணமடைந்த செய்தி கேட்டு வேதனை அடைந்தேன். கவுண்டம்பாளையம் பகுதியில் பையா என்ற ஆர்.கிருஷ்ணன் ஆற்றிய மக்கள் சேவை மகத்தானது என்று முதல்வர் தெரிவித்தார்.