Saturday, September 21, 2024
Home » மணப்பாறை நிதி நிறுவனத்தில் பணம் செலுத்தி ஏமாந்தவர்கள் புகார் செய்யலாம்

மணப்பாறை நிதி நிறுவனத்தில் பணம் செலுத்தி ஏமாந்தவர்கள் புகார் செய்யலாம்

by Dhanush Kumar

திருச்சி: திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுப்பட்டியில், மகாதேவன் என்பவர் நடத்தி வந்த நிதி நிறுவனத்தில் பணம் செலுத்தி ஏமாந்தவர்கள் புகார் அளிக்கலாம் என திருச்சி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் அறிவித்துள்ளனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் மேலும் தெரிவித்திருப்பதாவது: மணப்பாறை அருகேயுள்ள நடுப்பட்டியைச் சேர்ந்தவர் மகாதேவன். அவர் மகாதேவன் சிட்பண்ட்ஸ் என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி வந்துள்ளார். இவர் பல்வேறு விதமான கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்துள்ளார். அதை நம்பிய அதே பகுதியைச் சேர்ந்த அரசுப்பள்ளி ஆசிரியர் கந்தன் என்பவரும் தவணைகளில் ₹.1.25 லட்சம் முதலீடு செய்து வந்துள்ளார். ஆனால் குறிப்பிட்டபடி முதிர்வுத்தொகை மற்றும் ஊக்கத்தொகைகள் வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது. அதுபோல மேலும் பலரும் பணம் செலுத்தி ஏமாந்துள்ளனர்.

You may also like

Leave a Comment

5 × 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi