சென்னை : தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் இன்று முதல் 7 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்துக்கு வாய்ப்பு இருப்பதாகவும் நாளை, நாளை மறுநாள் நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இரவு, அதிகாலை வேளையில் உறைபனி ஏற்படக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.