மதுரை: அலங்காநல்லூர் கீழக்கரையில் கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். ரூ.62.78 கோடியில் கட்டப்பட்டுள்ள ஏறுதழுவுதல் அரங்கத்தை முதல்வர் திறந்து வைத்தார். ஜல்லிக்கட்டு அரங்கத்திற்கு கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு அரங்கத்தின் வெளியே அமைக்கப்பட்டுள்ள ஏறு தழுவுதல் சிலையையும் முதல்வர் திறந்து வைத்தார்.