Sunday, October 6, 2024
Home » ராமேஸ்வரம் மீனவர்களை மீட்க வாசன், அன்புமணி வலியுறுத்தல்

ராமேஸ்வரம் மீனவர்களை மீட்க வாசன், அன்புமணி வலியுறுத்தல்

by Dhanush Kumar

சென்னை: இலங்கை கடற்படையினர் கைது செய்த ராமேஸ்வரத்தை சேர்ந்த 6 மீனவர்களையும், படகுகளையும் மீட்க, ஒன்றிய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜி.கே.வாசன், அன்புமணி வலியுறுத்தியுள்ளனர். ஜி.கே.வாசன் (தமாகா தலைவர்): ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 6 மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளது. அவர்களது 2 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஒன்றிய அரசு, இலங்கை அரசின் வசம் உள்ள அனைத்து தமிழக மீனவர்களையும், படகுகளையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அன்புமணி (பாமக தலைவர்): ஒரு வாரத்தில் மட்டும் 3 நிகழ்வுகளில் 40 தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை படையினரின் அத்துமீறலுக்கு நிரந்தர தீர்வு காண ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

You may also like

Leave a Comment

four × 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi