திஷ்பூர்: அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா உத்தரவின்பேரில் ராகுல் காந்தி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கவுகாத்திக்குள் நுழைய விடாமல் தடுக்கப்பட்டதால் மக்களை போராட்டம் நடத்த தூண்டியதாக ராகுல் காந்தி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அசாம் பாஜக அரசை கண்டித்து காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.