சென்னை: சங் பரிவார்களின் சதி அரசியலை முறியடிக்க அனைத்து தரப்பு இந்து மக்கள் அணிதிரள வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். அயோத்தி ராமர் விழா அப்பாவி இந்து மக்களை ஏய்க்கும் தேர்தல் பிரச்சார அரசியல் விழா என்று அவர் விமர்சனம் செய்துள்ளார். ஜெய் ஸ்ரீராம் முழக்கத்தையே ஆயுதமாக உயர்த்திப் பிடித்து இன்று அங்கே ராமர் கோயில் நிறுவப்பட்டுள்ளது. ராமர் பெயரால் இந்து மக்களுக்கு எதிரான மாய்மால அரசியலின் உச்சம்தான் அயோத்தியில் அரங்கேறும் தேர்தல் பிரசார விழா என்று அவர் கூறியுள்ளார்.