Sunday, October 6, 2024
Home » சிறுநீர் தொற்று குணமாக எளிய வழிகள்!

சிறுநீர் தொற்று குணமாக எளிய வழிகள்!

by Nithya

நன்றி குங்குமம் டாக்டர்

இன்றைய சூழலில் பெரும்பாலான பெண்கள் அவ்வப்போது சந்திக்கும் பிரச்னை என்றால் அது யூரினரி இன்பெக்ஷன் எனும் சிறுநீர் தொற்று ஆகும். இதற்கு காரணம், நீண்டநேரம் சிறுநீர் கழிக்காமல் அடக்கி வைப்பது, தண்ணீர் சரியாக அருந்தாமல் இருப்பது போன்றவையாகும். வேலைக்கு போகும் பெண்களே பெரும்பாலும் இந்த தொற்றினால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். அதற்கு காரணம், அவர்களுக்கு சரியான கழிவறை வசதி இல்லாததே. சிறுநீர் தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்ளும் வழிகள்:

தினசரி காலை 6 மணிக்கு எழுந்து கொள்பவர்களாக இருந்தால், காலையிலிருந்து இரண்டு அல்லது மூன்று முறை அரைமணி நேர இடைவெளியில் 4-5 டம்ளர் தண்ணீர் அருந்திவிட வேண்டும். பின்னர், வீட்டில் இருந்து வேலைக்கு கிளம்புவதற்கு முன்பு சிறுநீர் கழித்துவிட்டு செல்ல வேண்டும். அலுவலகம் சென்றபிறகு, அவ்வப்போது சிறிது சிறிதாக தண்ணீர் அருந்திக் கொள்ள வேண்டும். மீண்டும் வீடு திரும்பியதும் சிறுநீர் கழித்துக் கொள்ளலாம். இதனால், சிறுநீர் அடக்கி வைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படாது.

அடிக்கடி சிறுநீர் தொற்றுக்கு ஆளாகிறவர்கள், வாரத்திற்கு மூன்றுநாள் பார்லியை வாங்கி அரை ஸ்பூன் எடுத்து தண்ணீர்விட்டு கொதிக்கவிட்டு, குடித்து வரலாம். இது நல்ல தீர்வாக இருக்கும். வெளியிடங்களுக்குச் செல்லும்போது அல்லது அலுவலகம், மால், திரையரங்கம் போன்ற இடங்களில் உள்ள பொது கழிவறைகளை பயன்படுத்தும்போது, கழிவறையை பயன்படுத்துவதற்கு முன்பு டெட்டால் ஸ்ப்ரே அடித்துவிட்டு, பிளஷை அழுத்திய பின்பே பயன்படுத்த வேண்டும். டெட்டால் ஸ்ப்ரே இப்போது கடைகளில் கிடைக்கிறது அதை வாங்கி எப்போதும் கையில் வைத்துக் கொள்வது நல்லது. இதை பயன்படுத்தும்போது சிறுநீர் தொற்று பிரச்னைகளை தவிர்க்க முடியும்.

இரவில் படுக்க போவதற்கு முன்பு சிறுநீர் கழித்துவிட்டு, திரிபலா பொடி (நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்). அதனை வாங்கி, அந்த பொடியை அரை ஸ்பூன் எடுத்து, வெது வெதுப்பான நீரில் கலந்து அந்த நீரினால் சிறுநீர் கழித்த இடங்களை சுத்தம் செய்துவிட்டு படுக்க வேண்டும். தொற்றிலிருந்து விடுபடலாம். மேலே சொன்ன இந்த நான்கு வழிமுறைகளையும் தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால், எந்தவித சிறுநீர் தொற்றும் ஏற்படாது.

தொகுப்பு: தேவி

You may also like

Leave a Comment

nine − 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi