சென்னை: கடனை திரும்பச் செலுத்தவில்லை என தனக்கு எதிராக லைகா நிறுவனம் அவதூறு பரப்புகிறது என்று விஷால் தரப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. தனக்கான பட வாய்ப்புகளை லைகா நிறுவனம் தடுக்க நினைப்பதாகவும் உயர்நீதிமன்றத்தில் விஷால் குற்றச்சாட்டு. தங்களுக்கு செலுத்த வேண்டிய கடனை திரும்பச் செலுத்த விஷாலுக்கு உத்தரவிடக் கோரி லைகா நிறுவனம் வழக்கு பதிவு செய்துள்ளது. லைகா நிறுவனத்தை தவிர வேறு எந்த நிறுவனத்திடமும் கடன் நிலுவை இல்லை என்று விஷால் தரப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.