சென்னை: ஈகிள் பிரஸ் நிறுவனர் பிரதாப் சிங் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட இரங்கல் அறிக்கை: ஈகிள் பிரஸ் நிறுவனர் பிரதாப் சிங் மறைந்தார் என்ற செய்தி கேட்டு வருந்தினேன். கலைஞரோடும் எங்கள் குடும்பத்தோடும் நட்பு பாராட்டிய அவரது இழப்பு வேதனை தருகிறது.
பேரறிஞர் அண்ணா, கலைஞர் உள்ளிட்ட தமிழ் ஆளுமைகளின் நூல்களை வெளியிட்டுப் பூம்புகார் பதிப்பகத்தைத் தமிழ்க் கருவூலமாக நடத்தியவர் பிரதாப் சிங். அவரது பிரிவால் வாடும், குடும்பத்தினர் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது மகனும், இனிய நண்பருமான ராஜா சுந்தர்சிங்கிற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொண்டேன்.